புதுக்கோட்டை

ஜெஜெ கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

DIN

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜ. பரசுராமன் தலைமை வகித்தார். 
கல்லூரி அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். நியு செஞ்சுரி புத்தக நிலையம், தில்லி ஹிமாலயா புத்தக நிலையம், எஸ்டி புத்தக நிலையம் ஆகிய பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றன.
சூழலியல், கல்வி, அறிவியல் உள்ளிட்ட புத்தகங்கள் அதிகளவில் விற்பனையானதாக நியு செஞ்சுரி புத்தக நிலைய மேலாளர் சுரேஷ் தெரிவித்தார். புத்தகங்கள் அனைத்துக்கும் 20 சதவிகித கழிவு வழங்கப்பட்டது.நிறைவில் கல்லூரி நூலகர் சி. ராஜாராம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT