புதுக்கோட்டை

புதுகையில் நூல் வெளியீட்டு விழா

DIN


புதுக்கோட்டை அறிவியல் இயக்க அலுவலக வளாகத்தில் ச. ஆரோக்கியசாமி எழுதிய வர்ணம், சாதி, தீண்டாமை- இந்தியாவில் மட்டுமா? என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காந்தி சமூக நலப் பேரவையின் நிறுவனர் வை.ந. தினகரன் விழாவுக்குத் தலைமை வகித்தார். புலவர் துரை. மதிவாணன் நூலை வெளியிட, மருத்துவர் ச. ராமதாஸ் அதனைப் பெற்றுக் கொண்டார். வர்த்தகர் சங்க முன்னாள் தலைவர் ஆர். சேவியர், பேராசிரியர் த. மணி, கம்பன் கழகத்தின் செயலர் இரா. சம்பத் குமார், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, நிலா பாரதி, ராணியார் பள்ளி ஆசிரியை சாந்தா, வாசகர் பேரவைச் செயலர் சா. விஸ்வநாதன் உள்ளிட்டோரும் நூல் குறித்துப் பேசினர். நூலாசிரியர் ச .ஆரோக்கியசாமி ஏற்புரை வழங்கினார். ச. மத்தியாஸ் வரவேற்றார். விஜயலட்சுமி நன்றி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT