இந்திய மருத்துவச் சங்கத்தின் புதுக்கோட்டை கிளை சார்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை தர்மா முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயலர் டாக்டர் சலீம், பொருளாளர் டாக்டர் ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முதியோர் இல்லத்திலுள்ள ஆதரவற்ற முதியோர்களுடன் பொங்கல் வைத்து இந்த விழா கொண்டாடப்பட்டது.
முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் பாலாமணி ராஜசேகர் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.