புதுக்கோட்டை

மடிக்கணினி கேட்டு மாணவர் சங்கத்தினர் ஊர்வலம்

DIN

புதுக்கோட்டையில் கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படாத அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் கல்வி உதவித் தொகை  வழங்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலர் எஸ். ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.எஸ். ஓவியா, முன்னாள் மாவட்டச் செயலர் எஸ். விக்கி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊர்வலமாக வந்த ஏராளமான மாணவர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல அரசுப் பள்ளிகளில் கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆகிய இரு ஆண்டுகளாக விலையில்லா மடிக்கணினிகளும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படவில்லை. ஆனால் நிகழாண்டில் மடிக்கணினி வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. எனவே, கடந்த ஆண்டுகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கும் அரசின் மடிக்கணினி, கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT