புதுக்கோட்டை

பொன்.புதுப்பட்டி பள்ளியில் வாசிப்பு இயக்கம்

DIN


பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொன்னமராவதி கிளை நூலகத்தின் சார்பில் வாசிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் சோம.மல்லீஸ்வரி தலைமை வகித்தார். கிளை நூலகர் பா.ராமகிருஷ்ணன் வரவேற்றார். 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வாசிப்போம் நேசிப்போம் என்னும் தலைப்பில் கட்டுரைப்போட்டியை வாசகர் வட்ட தலைவர் கே.பொன்னுச்சாமி தொடங்கி வைத்தார். 
பள்ளி மாணவ, மாணவிகள் நூலகத்தினை  பயன்படுத்தி பொது அறிவினை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தினார். போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.  உதவி தலைமையாசிரியர் ம.பழனியப்பன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

SCROLL FOR NEXT