புதுக்கோட்டை

வேந்தன்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர், துணைத்தலைவர் தேர்வு

DIN


பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக வார்ப்பட்டு எஸ்ஆர்எம்.மலைச்சாமி(அதிமுக), துணைத்தலைவராக வேந்தன்பட்டி இளையராஜா(திமுக) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. வேந்தன்பட்டியில் வேட்பாளர்கள் இருவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இக்கூட்டுறவு சங்க தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் 7 பேரும், திமுக சார்பில் 4 பேரும் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து வேந்தன்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவராக எஸ்ஆர்எம்.மலைச்சாமி, துணைத்தலைவராக வேந்தன்பட்டி இளையராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT