புதுக்கோட்டை

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது

DIN


முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை ரூ. 5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நிருபர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது: 
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 5,900 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
இதில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் ரூ. 2,200 கோடிக்கு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, தொகை பெறப்பட்டுள்ளது.
சித்த மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் பெறப்படவில்லை. பெரும் சவாலான ஒன்றாக உள்ளது.
நிபா வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டுக்கு வந்துவிடாமல் இருக்க கேரள எல்லைகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 பிகாரில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் தமிழகத்துக்கு பரவ வாய்ப்பில்லை. ஏனெனில், அது தொற்றுநோய் அல்ல. இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் மூளைக்காய்ச்சலுக்கு அனைத்து மருத்துவமும் தயார் நிலையில் உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT