புதுக்கோட்டை

மூடப்பட்ட மதுக்கடையை திறக்க மக்கள் எதிர்ப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன. இந்நிலையில், மேற்பனைக்காட்டில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு முயற்சி நடைபெறுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், ""மேற்பனைக்காட்டில் இயங்கிவந்த மதுக்கடைகளால் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்தது. பின்னர் மக்களின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட அந்த மதுக்கடைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT