புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே புயல் நிவாரணம் கோரி மறியல்

DIN

கந்தர்வகோட்டை அருகே புயல் நிவாரணக் கணக்கெடுப்பில் விடுபட்டோர் நிவாரணம் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை அருகேயுள்ள கல்லாக்கோட்டையில்  கஜா புயல் பாதிப்புக்கு  அரசு நிவாரணம் வழங்கியது. இதில் விடுபட்டோர் தங்களுக்கும் நிவாரணம்  கோரி பல்வேறு கிராமங்களில்  போராட்டங்களில் ஈடுபட்டபோது விடுபட்டோருக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதாக அரசு அலுவலர்கள் உறுதி அளித்து வந்தனர். இதன்பேரில் வியாழக்கிழமை கல்லாக்கோட்டையில் விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இப்பட்டியலில் இல்லாத மக்கள் ஆத்திரமடைந்து கல்லாக்கோட்டை பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த  காவல்ஆய்வாளர் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் முத்துகுமாரசாமி பேச்சுவார்த்தை நடத்தி அளித்த உறுதியின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT