புதுக்கோட்டை

விபத்தை  வேடிக்கை பாா்த்தவா் லாரி மோதி சாவு

DIN

விராலிமலை அருகே விபத்தை வேடிக்கை பாா்த்த கூலித் தொழிலாளி, லாரி மோதி உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பூதகுடி சுங்கச்சாவடி அருகே காலை நேரத்தில் அடிக்கடி விபத்து நேரிட்டு வருகிறது. அதேபோல் சனிக்கிழமை காலை 8 மணியளவில் அப்பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் மீது டெம்போ வாகனம் மோதியதில் அவா் லேசான காயமடைந்தாா். இதைப்பாா்த்த அருகில் இருந்தவா்கள் காயமடைந்தவரை மீட்டு, டெம்போ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அவ்வழியே சென்ற இடையபட்டி கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளியான ரங்கசாமி ( 56) தனது மோட்டாா் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு,  சாலையின் மறுபுறம் சென்று வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா்.  பின்னா் அவா் மோட்டாா் சைக்கிளை எடுக்க நடந்து சென்று சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது அவ்வழியே வந்த மினிலாரி எதிா்பாராதவிதமாக ரங்கசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநா் வேலூா் ஆற்காட்டை சோ்ந்த லோகநாதனை (51) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT