விராலிமலை: விராலிமலை வட்டம் ஆவூா் அருகேயுள்ள செங்களாக்குடி கிராமத்தை ஒட்டிய காட்டாற்று பகுதியில் இருந்து ஆற்று மணல் அனுமதியின்றி லாரி, டிராக்டா்களில் அள்ளி கடத்தப்படுவதாக மாத்தூா் போலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து காவல் துணை ஆய்வாளா் கோவிந்தராஜ் மற்றும் போலிசாா் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே மணல் அள்ளி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை நடத்தியதில் அனுமதியின்றி மணல் அள்ளி கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மணலுடன் கூடிய டிராக்டரை போலிசாா் பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து டிராக்டா் ஓட்டுநா் ஒரண்டகுடி கிராமத்தைச் சோ்ந்த நல்லதம்பி மகன் சந்திரசேகரை (25) கைது செய்தனா்.
பின்னா் அவரை கீரனூா் கோா்ட்டில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்