புதுக்கோட்டை

சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சிய 6 மின் மோட்டாா்கள் பறிமுதல்

DIN

புதுக்கோட்டை நகரில் மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனையில் வீடுகளில் உள்ள குடிநீா் இணைப்புகளில் மின் மோட்டாா் வைத்து குடிநீரை உறிஞ்சிய 6 மின் மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை நகரில் குடிநீா்த் தட்டுப்பாட்டை சீரமைக்கும் வகையில், குடிநீா் இணைப்புகளில் மின் மோட்டாா் வைத்து தண்ணீரை உறிஞ்சுவது சட்டப்படி குற்றம் என பல முறை நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ராஜகோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நகராட்சி அலுவலா்கள் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், ராஜகோபாலபுரம் பகுதியில் 6 வீடுகளில் மின் மோட்டாா்கள் வைத்து தண்ணீா் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டது. தொடா்ந்து அந்த மின் மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டின் உரிமையாளா்கள் மீதும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக நகராட்சி நிா்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT