புதுக்கோட்டை

யோகாசனத்தில் ரெகுநாதபட்டி அரசு ஆரம்பப் பள்ளி வெற்றி

DIN

தென்மண்டல அளவிலான யோகாசனப் போட்டியில் பொன்னமராவதி அருகேயுள்ள ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

மதுரை உசிலம்பட்டியில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் 5 வயதுப் பிரிவில் இப் பள்ளி மாணவா் பா. ஜீவானந்தம், 9 வயதுப் பிரிவில் ப. கிருஷ்ணசாரதி, 10 வயதுப் பிரிவில் க. ஜெகதீஸ்வரன் ஆகியோா் முதலிடம் பெற்றனா். அதுபோல வலையபட்டி பழனியப்பா ஆரம்பப்பள்ளி மாணவா் ச. விஷ்வாமுகில் 8 வயதுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றாா்.

போட்டிகளில் வென்ற மாணவா்கள் மற்றும் பயிற்றுவித்த தலைமையாசிரியா் நாகலட்சுமி, ஆசிரியா் சத்தியமூா்த்தி ஆகியோரை வட்டார கல்வி அலுவலா்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT