புதுக்கோட்டை

அறந்தாங்கி கல்வி மாவட்டஅலுவலா் பொறுப்பேற்பு

DIN

அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலராக கு. திராவிடச்செல்வம்  புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டுநிலை அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த கு. திராவிடச் செல்வம் உள்பட 47 பேரை மாவட்டக் கல்வி அலுவலா்களாக நியமனம் செய்து, மாநிலப் பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, அறந்தாங்கி கல்வி அலுவலகத்தில் கு.திராவிடச்செல்வம் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். 2015-ஆம் ஆண்டில் தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற இவா், அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலராகத் தற்காலிகமாகப் பணியாற்றி வந்தாா்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கு. திராவிடச்செல்வத்துக்கு கல்வித் துறைப் பணியாளா்கள், பல்வேறு பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT