புதுக்கோட்டை

மருத்துவர்கள்,  செவிலியர்களுக்கு மன அழுத்த  மேலாண்மைப் பயிற்சி

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கான மன அழுத்த மேலாண்மைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி  பயிற்சியைத் தொடக்கி வைத்து பேசியது:
மருத்துவர்களும், செவிலியர்களும் மன அழுத்த மேலாண்மைப் பயிற்சியை முறையாகக் கற்றுக் கொண்டால்தான், நோயாளிகளுக்கு தரமான சேவையை அளிக்க முடியும் என்றார். தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியில் மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்ப்பது, கட்டுப்படுத்துவது, சிகிச்சை அளித்தல் ஆகிய முன்று பிரிவுகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT