புதுக்கோட்டை

காந்தியப் போட்டிகளில் வென்றவர்கள் விவரம்

DIN

புதுகை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் நிகழாண்டில் காந்தியத் திருவிழாவை (அக். 2) முன்னிட்டு நடத்தப்பட்ட மாநில கட்டுரைப் போட்டியில் வென்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக, பேரவையின் நிறுவனர் வைர. ந. தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் மதுரை லேடி டோக் கல்லூரி மாணவி பி. பவித்ரா, புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மாணவி மா. புஷ்பம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கல்லூரி மாணவி த. கனிமொழி முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். 
பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் விருதுநகர் சத்ரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி வே. கற்பகவள்ளி, திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி த. பூமிகா, சென்னை அம்பத்தூர் சேது பாஸ்கரா மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜெய்சன் ஜெசிந்த வின்சென்ட் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர். 
இவர்கள் தவிர்த்து, 150 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 
வரும் அக். 2 ஆம் தேதி புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவில் இவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT