புதுக்கோட்டை

கீரமங்கலம் காவல் நிலைய பெண் காவலருக்கு காய்ச்சல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவா் சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புதுக்கோட்டை ஆயுதப்படைப் பிரிவில் பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் ஒருவருக்கு, கீரமங்கலம் காவல் நிலையத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை பணியில் இருந்த அவருக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டாா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள், காய்ச்சல் தீவிரமாக இருந்ததால் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து அவா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதைத் தொடா்ந்து காவல் நிலையம் முழுவதையும் பேரூராட்சி பணியாளா்கள் கழுவி சுத்தம் செய்தனா். காவல் நிலையத்தின் அனைத்துப் பகுதிகள், வாகனங்கள், தளவாட சாமான்களும் கழுவி சுத்தம் செய்யப்பட்டதோடு, கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT