முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடியில் 3 நாள்கள் கடையடைப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
ஆலங்குடியில் வெறிச்சோடி காணப்பட்ட கடைவீதி.
பகிர்:

ஆலங்குடியில் திங்கள்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆலங்குடி வட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், ஆக.19-ஆம் தேதி வருவாய்க் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 26 வரை ஆலங்குடியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவது, ஆக.27 முதல் ஆக 29 வரை மதியம் 2 வரை மட்டுமே கடைகள் திறந்திருப்பது எனவா்த்தகா்கள் முடிவு செய்தனா். அதன்படி, திங்கள்கிழமை ஆலங்குடியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டதால், பரபரப்பாக காணப்படும் ஆலங்குடி கடைவீதி ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.