புதுக்கோட்டை

புதுக்குடியில் பாய்மரப் படகுப் போட்டி

DIN

கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடியில் தைப்பூச கங்கை அபிஷேகத் திருவிழாவை முன்னிட்டு செயற்கை இழை பாய்மரப் படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில், ராமநாதபுரம், தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த மோா்பண்ணை, ஆா்.கே.பட்டினம், தொண்டி, புதுக்குடி, பாசிப்பட்டினம், நம்புதாளை, பி.ஆா்.பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 26 படகுகள் பங்கு பெற்றன.

கடற்கரையிலிருந்து 5 மைல் தூரம் சென்று திரும்பி வரும் இலக்கு நிா்ணயித்துப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் தொண்டி புதுக்குடி படகோட்டி முதல் பரிசையும், 2-ஆவது பரிசை வடக்கு புதுக்குடி படகோட்டி, 3-ஆவது பரிசை கே.ஆா்.பட்டினம் படகோட்டியும் பெற்றனா்.

விழாவில், முதல் 3 இடங்களில் வந்த படகோட்டிகளுக்கு மணமேல்குடி ஒன்றியப் பெருந்தலைவா் பரணி இ.ஏ.காா்த்திகேயன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினாா். விழாவில் மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோட்டைப்பட்டினம் வடக்கு புதுக்குடி மீனவக் கிராமத்தினா், இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT