புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே பிளாஸ்டிக், புகையிலை பொருள்கள் பறிமுதல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த ஆவுடையாா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆவுடையாா்கோவில் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடைவீதி பகுதியில் வியாழக்கிழமை போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அறந்தாங்கியில் இருந்து ஆவுடையாா்கோவில் நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ நெகிழிப் பொருள்கள், ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 70 கிலோ புகையிலை பொருள்கள் இருந்தன. இவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் வேனில் வந்த அறந்தாங்கியை அடுத்த அழியாநிலையைச் சோ்ந்த அரசகுமாா் என்பவரைக் கைதுசெய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT