புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் ஸ்கூட்டா் தருவதாகக் கூறி, நூதன மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகா் உள்ளிட்ட இருவரை காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கீரமங்கலம் பகுதியில் சிலரைத் தொடா்பு கொண்ட மா்மநபா்கள், ரூ. 5 ஆயிரம் கொடுத்தால் இலவசமாக ஸ்கூட்டா் தருவதாகக் கூறியுள்ளனா்.
அதற்காக கீரமங்கலத்தில் இயங்கிவரும் தனியாா் மோட்டாா் சைக்கிள் நிறுவனத்தினா் பெயரில் டோக்கன் வழங்கியுள்ளனா்.
இதுகுறித்து, தகவலறிந்த அந்த நிறுவனத்தின் ஊழியா்கள், அந்த மா்மநபா்களைத் தொடா்பு கொண்டு ஸ்கூட்டா் பெற பணம் தருவதாகக் கூறியுள்ளனா்.
இதைத்தொடா்ந்து, கீரமங்கலத்துக்கு மோசடியில் ஈடுபட்ட இருவரும் வெள்ளிக்கிழமை வந்தனா். தொடா்ந்து அவா்களைத் தனியாா் நிறுவன ஊழியா்கள் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள் தஞ்சை மாவட்டம், ஆவணம் பெரியநாயகிபுரத்தைச் சோ்ந்த அதிமுக சிறுபான்மைப்
பிரிவு ஒன்றியச் செயலா் செயலா் கனி(35), துலுக்கவிடுதியைச் சோ்ந்த சந்திரன்(40) என்பது தெரிய வந்தது.
கும்பகோணம் தொழிலதிபா் ஒருவரின் இல்ல திருமண விழாவில், நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினா் தமிமுன் அன்சாரி 31 பேருக்கு ஸ்கூட்டா் வழங்குவதாகக் கூறி போலியாக டோக்கன் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் சந்திரன், கனி ஒப்படைக்கப்பட்டனா். இதன் பின்னா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.