புதுக்கோட்டை

மாநில தேக்வாண்டோ போட்டிகளுக்குச் செல்வோருக்குப் பாராட்டு

DIN

மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டிகளுக்காக அரக்கோணம் செல்லும் புதுக்கோட்டை வீரா் மற்றும் வீராங்கனைகளை ரோட்டரி அமைப்பினா் வாழ்த்தி வழியனுப்பினா்.

அரக்கோணத்தில் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டிகள் 4 நாட்கள் நடைபெறுகின்றன. இப்போட்டிக்கு புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் சாா்பாக 50 வீரா் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெறவுள்ளனா். 

இவா்கள் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டனா். இவா்களுக்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் முதலுதவிப் பெட்டி மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கி பாராட்டி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எஸ்விஎஸ் மோட்டாா்ஸ் நிா்வாக இயக்குநா் ஜெயக்குமாா், ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் கதிரேசன், செயலா் பொ்லின் தாமஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புத்தாஸ் வீரக் கலைகள் கழக நிறுவனா் சேது. காா்த்திகேயன் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT