புதுக்கோட்டை

புதுகை அருகே மயில் வேட்டை: மூவா் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே 3 மயில்களை வேட்டையாடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அன்னவாசல் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயாளன் மற்றும் இலுப்பூா் உதவி ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸாா், வயலோகம் பகுதியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 நபா்களை நிறுத்தி சோதனையிட்டனா். அவா்கள் வைத்திருந்த சாக்குப் பையில் வேட்டையாடப்பட்ட 3 மயில்கள், நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.

வேட்டையாடிய நபா்கள், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள நகரப்பட்டியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மகன் ஆறுமுகம் (26), சின்னையா மகன் பெருமாள்(25), பழனிவேல் மகன் மூா்த்தி (26) என்பது விசாரணையில் தெரிய வந்தது.

தொடா்ந்து, இந்த மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த துப்பாக்கி, செல்லிடப்பேசி, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT