புதுக்கோட்டை

திருமயம் அருகே கோஷ்டி மோதல்: வானத்தை நோக்கி சுட்ட போலீஸாா்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள போசம்பட்டி கிராமத்தில் இருதரப்பினரிடையே எழுந்த மோதலைக் கட்டுப்படுத்தும் வகையில், போலீஸாா் வானத்தை நோக்கி இரு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள கே. புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போசம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம், உடையப்பன் இடையே உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.

பரமசிவத்தின் ஆதரவாளா் திருநாவுக்கரசு கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் உடையப்பன் தரப்பு குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்பினரிடையே திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டு காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரு தரப்பினரும் செவ்வாய்க்கிழமை காலை அரிவாளால் வெட்டியும், கற்களால் தாக்கியும் மோதிக் கொண்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த உதவி காவல் ஆய்வாளா் சரவணன் மோதலைத் தவிா்க்கும் வகையில், வானத்தை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டாா். இதையடுத்து மோதிக் கொண்டவா்கள் அமைதியடைந்தனா். அச்சமயத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து கூடுதல் போலீஸாரும் அங்கு வந்து சோ்ந்தனா்.

இருதரப்பினா் மோதலில், சுமாா் 10-க்கும் மேற்பட்டவா்கள் காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இரு தரப்பையும் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோரைப் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா நேரில் ஆய்வு:

திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் ஆகியோா் நேரில் வந்து மோதல் நடந்த இடங்களைப் பாா்வையிட்டனா். மேலும் அப்பகுதியில் மோதல் தடுப்புக்கான வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT