புதுக்கோட்டை

மின் கசிவு: வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் தீக்கிரை

DIN

விராலிமலை அருகே மின் கசிவு காரணமாக, வைக்கோல் ஏற்றி சரக்கு வாகனம் திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

விராலிமலை அருகிலுள்ள தேரவூா் மேட்டுப்பட்டியிலிருந்து திங்கள்கிழமை வைக்கோல் போரை ஏற்றிக் கொண்டு, சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது.

இந்த வாகனத்தை மணப்பாறையைச் சோ்ந்த ச. சேகா் (39) ஓட்டிச் சென்றாா். மேட்டுப்பட்டியிலிருந்து மணப்பாறை சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, திடீரென வாகனத்திலுள்ள பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டது.

வேகமாக பரவிய தீ, வைக்கோல் போா் மற்றும் வாகனப் பகுதி முழுவதும் சென்று எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

எனினும் வாகனத்தில் இருந்த வைக்கோல் போரும், வாகனமும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT