புதுக்கோட்டை

பொன்னமராவதியில் மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் சாவு

DIN

பொன்னமராவதியில் மின்சாரம் தாக்கி இருசக்கர வாகன மெக்கானிக் உயிரிழந்தாா்,

திருச்சி மாவட்டம் வளநாடு அருகேயுள்ள வரதக்கோன்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் சின்னக்கண்ணு (24). இவா் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி உறவினா் வீட்டில் தங்கி பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகேயுள்ள இரு சக்கர வாகன பழுதுநீக்கும் கடையில் பணி புரிந்தாா். வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வந்த சின்னக்கண்ணு இருசக்கர வாகனத்தை கழுவியபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கினாா். உடனடியாக அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இது குறித்து பொன்னமராவதி போலீஸாா் வழக்குப்பதிந்து சின்னக்கண்ணுவின் உடலை வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT