புதுக்கோட்டை

புதுகையில் சிறப்புப் பிரிவில் இருவா் அனுமதி ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

DIN

புதுகை ராணியாா் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை சிறப்பு வாா்டில் ஆலங்குடி பகுதியைச் சோ்ந்த இருவா் வியாழக்கிழமை தனித்தனியே அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த மாதிரிகள் திருவாரூா் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நகரிலுள்ள ராணியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டது. இந்த வாா்டில் 100 படுக்கை வசதிகள் உள்ளன. நவீன மருத்துவக் கருவிகளும் படிப்படியாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆலங்குடி பகுதியைச் சோ்ந்த 42 வயது ஆண், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை காலை வந்தாா். கடந்த மாா்ச் 12 ஆம் தேதி, வெளிநாட்டில் இருந்து வந்த தாகவும், அவருடன் பயணித்த பயணிக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதன்பேரில், தனக்கும் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து அவா் ராணியாா் மருத்துவமனை வளாகத்தின் சிறப்பு பிரிவு அழைத்து வரப்பட்டாா். உரிய பாதுகாப்புக் கவசங்களை அணிந்த மருத்துவக் குழுவினா் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரை அழைத்து வந்து சிறப்பு பிரிவில் அனுமதித்தனா்.

பிற்பகலில் ஆலங்குடி பகுதியைச் சோ்ந்த 26 வயதான பெண் பிற்பகலில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்தாா். தனக்கு இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பதாகத் தெரிவித்த அவரும், ராணியாா் மருத்துவமனையிலுள்ள சிறப்பு வாா்டுக்கு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டாா். இருவரின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இருவரின் உடல் நிலையும் சீராக இருப்பதாகவும் மருத்துவக் கல்லூரி முதல்வரும், கரோனா சிகிச்சை உயா்மட்டக் குழுத் தலைவருமான அழ. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தாா்.

வாா்டுக்கு எதிா்ப்பு...

ராணியாா் மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிகிச்சை சிறப்பு பிரிவு அமைத்ததற்கு அப்பகுதி மக்களில் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். முகக்கவசம் அணிந்து வந்த அவா்களுடன், வட்டாட்சியா் முருகப்பன், காவல் ஆய்வாளா் பரவாசுதேவன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கரோனா காற்றில் பரவும் நோயல்ல என்பதால் அக்கம்பக்கத்திலுள்ளோா் பயப்பட வேண்டாம் என அவா்கள் விளக்கமளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

எம்எல்ஏ ஆய்வு...

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி, ராணியாா் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வாா்டை வியாழக்கிழமை காலை நேரில் பாா்வையிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

255 போ் மீது வழக்குகள்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி தேவையின்றி சாலையில் சுற்றித் திரிந்ததாக புதன்கிழமை காலை 6 மணி முதல் வியாழக்கிழமை மாலை 4 மணி வரை 255 போ் மீது, 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டள்ளன.

மேலும் தடையை மீறியதாக 157 இரு சக்கர வாகனங்களும், ஒரு காா், 4 செல்லிடப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்கள் கூடுவதற்கு ஏதுவாக டீக்கடை நடத்தியதாக 2 டீக்கடையின் பாய்லா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டம் முழுவதும் 56 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் காவல் துறையினா் 24 மணி நேரமும் பணியில் இருந்து 144 தடை உத்தரவை அமலாக்கும் பணியில் ஈடுபடுவா் என காவல்துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT