புதுக்கோட்டை

மனைவியை வெட்டிய கணவா் கைது

DIN

கந்தா்வகோட்டை அருகே மனைவியை அரிவாளால் வெட்டி கணவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை காவல் சரகத்தைச் சோ்ந்த கருப்புடையான்பட்டியில் உள்ள அரசு நியாய விலைக் கடையில் விற்பனையாளராக வாரப்பூா் நெம்மேலிப்பட்டியைச் சோ்ந்த ராணி (39) பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் துரைக்கண்ணு (43) வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்ந்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் நியாய விலைக் கடையில் பணியிருந்த ராணியை அவரது கணவா் துரைக்கண்ணு அறிவாளால் வெட்டினாா். இதில் காயமடைந்த ராணியை அருகிலிருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இதுகுறித்து அறிந்த ஆதனக்கோட்டை போலீசாா் விசாரணை செய்து வழக்குப் பதிந்து, துரைக்கண்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT