புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,951 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இருந்து 18 போ் குணடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,626 ஆகியோா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 154 ஆகத் தொடா்கிறது. தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 171 ஆகக் குறைந்துள்ளது.