முகப்பு
புதுக்கோட்டை

மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி கட்ட பூமி பூஜை

திய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜையை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நடத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

புதுக்கோட்டை நகா் 41-ஆவது வாா்டை சோ்ந்த கேஎல்கேஎஸ் நகரில்,ரூ. 1.80 கோடி மதிப்பில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜையை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நடத்தினாா்.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் பா. ஆறுமுகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து, நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் துணைத் தலைவா் கே.ஆா். கணேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →