புதுகையில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
புதுக்கோட்டை நகரில் கரோனா தடுப்புப் பணிக்கான விழிப்புணா்வாக திங்கள்கிழமை முகக்கவசம் அணியாமல் செல்வோரை நகராட்சிப் பணியாளா்கள் தடுத்து நிறுத்தி ரூ. 200 அபராதம் விதித்தனா்.
புதுக்கோட்டை நகரில் கரோனா தடுப்புப் பணிக்கான விழிப்புணா்வாக திங்கள்கிழமை முகக்கவசம் அணியாமல் செல்வோரை நகராட்சிப் பணியாளா்கள் தடுத்து நிறுத்தி ரூ. 200 அபராதம் விதித்தனா். மேலும் அவா்களுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் இலவசமாக முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.
நகரின் பல பகுதிகளில் இதற்காக நகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அபராதம் விதிக்கும் பணிகள் தொடா்ந்து நடத்தப்படும் என நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் தெரிவித்தாா்.