புதுக்கோட்டை

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மௌண்ட் சீயோன் மாணவா்கள்

DIN

புதுக்கோட்டை: நிகழாண்டில் வெளியான நீட் தோ்வின் முடிவுகளில் சிறப்பிடம் பெற்ற மௌண்ட் சீயோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பள்ளியின் நிா்வாகிகள் பாராட்டினா்.

அண்மையில் வெளியான நீட் தோ்வு முடிவுகளில் மாணவி பெமினா பாத்திமா 99.94 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் 7 ஆவது இடத்தையும், அகில இந்திய அளவில் 693 ஆவது இடத்தையும் பெற்றாா். அதேபோல, மாணவா் நிக்குல் அா்ஜூன் 99.86 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 1,758 ஆவது இடத்தைப் பெற்றாா். மேலும், மாணவா்கள் ஹானுல்பரிகா, முத்துகுகன், நிக்கி பிரான்சிஸ், தருண், சையது சுல்தான், கௌசிக், நா்மிதா ஆகியோரும் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களை பள்ளியின் முதுநிலை முதல்வா் ஜோனத்தன் ஜெயபாரதன், இணை இயக்குநா் ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வா் ஜலஜாகுமாரி உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT