புதுக்கோட்டை

ஊதியம் கோரி புதுகை நகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்கள், மேற்பார்வையாளர் முறையாக ஊதியம் வழங்கக் கோரி வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தங்களுக்கு அக்டோபர் முதல் தேதியில் வழங்கப்பட வேண்டிய ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே இரு நாள்களுக்கு முன்பு இரவு நகராட்சி ஆணையரிடம் முறையிட்டபோது இரு நாட்களில் ஊதியம் போடுவதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்ததாகவும் கூறினர்.

இதற்கிடையே இப்பிரச்னை தொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் வரும் நவ.2 ஆம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியதை அடுத்து பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து துப்புரவுப் பணியாளர்கள் வந்தனர். தங்களுக்கு வழக்கமான ஊதியம் தரும் நாளில் இருந்து 15 நாள் தாமதம் செய்து ஊதியம் வழங்குவதாகவும் தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

துப்புரவுப் பணியாளர்கள்

அவர்களுக்கும் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து அவர்களும் கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT