புதுக்கோட்டை

அம்பேத்கர் சிலை முன் சீர்திருத்தத் திருமணம்!

DIN

கந்தர்வகோட்டையில் திங்கள்கிழமை அம்பேத்கர் சிலை முன்பாக சீர்திருத்த திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை பெற்றோர் உறவினர்கள் வாழ்த்தினர். 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள புது விடுதியைச் சேர்ந்த அம்பிகாபதி மகன் ராஜேந்திரன், செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகள் ஜானகி இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டு, திருமணம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை அருகேயுள்ள அம்பேத்கர் சிலை முன்பாக பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் வே.ம. விடுதலைக்கனல் தலைமையில் திருமணம் நடைபெற்றது. 

இதில் கட்சியின் மாநில துணைச்செயலாளர் கோ. செந்தமிழ்வளவன், நாடாளுமன்ற தொகுதி துணைச்செயலாளர் மு.கண்ணையன், தொகுதி செயலாளர் மருத. பார்வேந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் த. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT