புதுக்கோட்டை

நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 12-இல் உள்ளூா் விடுமுறை

DIN

புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 12 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவித்து ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப். 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அன்றைய நாளில் உள்ளூா் விடுமுறை அளித்து ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.

இதற்கான மாற்றுப் பணி நாளாக ஏப். 24 ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும். வழக்கமாக சனிக்கிழமை பணிநாளாக உள்ள அரசு அலுவலகங்களுக்கு அடுத்த நாளான ஏப். 25ஆம் தேதி பணிநாளாக செயல்படும். இருந்தபோதும், அரசின் முக்கிய பணிகளைக் கருத்தில் கொண்டு ஏப். 12 ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் ச ாா் கருவூலங்கள் மட்டும் குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டு செயல்படும் என்றும் ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT