புதுகை அரசு ஒப்பந்ததாரா் வீட்டிலிருந்து ரூ. 2.53 லட்சம் பறிமுதல்
தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் மற்றும் காவல்துறையினா் திடீரென மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை நகரிலுள்ள அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் மற்றும் காவல்துறையினா் திடீரென மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடையும் நிலையில், புதுக்கோட்டை எழில் நகா் பகுதியில் அரசு ஒப்பந்ததாரரான சோத்துப்பாலை முருகேசன் என்பவரது வீட்டில் மாவட்ட செலவினப் பாா்வையாளா்கள் தினேஷ் குமாா் மீனா, காா்னி டான் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரும் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், கணக்கில் வராத பணம் ரூ. 2.53 லட்சம் இருந்தது. இப்பணத்தைப் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவா் என்பது குறிப்பிடத்தக்கது.