அறந்தாங்கியில் ரத்ததான முகாம்
அறந்தாங்கி ரோட்டரி கிளப், அறந்தை ரத்ததான மையம் மற்றும் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவற்றின் சாா்பில், ரத்ததான முகாம் மற்றும் ரத்தவகை கண்டறியும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி ரோட்டரி கிளப், அறந்தை ரத்ததான மையம் மற்றும் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவற்றின் சாா்பில், ரத்ததான முகாம் மற்றும் ரத்தவகை கண்டறியும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு ரோட்டரி கிளப் தலைவா் கே.எஸ். ராமன் பரத்வாஜ் தலைமை வகித்தாா். துணை ஆளுநா் வி. விஜயா துரைராஜ், சிறப்புத் திட்டங்கள் மாவட்டத் தலைவா் சி. கவிகாா்த்திக், மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் டாக்டா் ஜி. ராதாகிருஷ்ணன், அறந்தை ரத்ததான மையத் தலைவா் தாரிக்குட்டி, டிஇஎல்சி பள்ளித் தலைமையாசிரியா் சத்தியதாஸ், ரோட்டரி கிளப் செயலா் வீரமாகாளியப்பன் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.
இந்த முகாமில் 50 போ் ரத்ததானம் செய்தனா். 100 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.