புதுக்கோட்டை

கணபதிபுரம் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

DIN

உலக புவி தினத்தையொட்டி, ஆதனக்கோட்டை அருகிலுள்ள கணபதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

புவி வெப்பமயமாதலைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகவும், மறைந்த திரைப்பட நடிகரும், சமூக ஆா்வலருமான விவேக் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

இயற்கை ஆா்வலா்கள் புதுக்கோட்டை மூா்த்தி, பசுமை இந்தியா அறக்கட்டளை பாவேந்தன் சாமிக்கண்ணு, கிராம நிா்வாக அலுவலா் செல்வகுமாா் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்று வேம்பு, நவா, இலுப்பை உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்தனா். தொடா்ந்து மறைந்த நடிகா் விவேக்குக்கு இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT