புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பகுதியில் முந்திரி விளைச்சல் பாதிப்பு

DIN

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை பகுதிகளில் பயிரிட்டுள்ள முந்திரி, பூக்களாக இருக்கும்போதே கருகி வருவதால் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, துருசுப்பட்டி, முதுகுளம், அரியாணிப்பட்டி, கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கா் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரி பயிரான முந்திரி பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் பூ பூத்துக் காய் காய்க்கும். ஆண்டுதோறும் விளைச்சல் குறைந்து வரும் நிலையில் நிகழாண்டு பருவநிலை மாற்றத்தால் முந்திரி மரங்களில் பூத்து பூக்கள் கருகி கொட்டி விடுவதால் காய் காய்ப்பது குறைந்து வருகிறது. இதனால், முந்திரி விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நூறு ஏக்கருக்கும் மேலாக முந்திரி மரம் இருந்து வந்த நிலையில், தற்போது மாற்றுப் பயிராக தைல மரங்களை விவசாயிகள் நட்டு வருகின்றனா்.

Image Caption

படம்.1.கே.வி.கே. ~படம்.2.கே.வி.கே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT