அரசு மகளிா் பள்ளியில்கலையரங்க மேடை திறப்பு
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 60 ஆயிரம் மதிப்பில் செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தினரால் கட்டித் தரப்பட்ட கலையரங்க மேடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 60 ஆயிரம் மதிப்பில் செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தினரால் கட்டித் தரப்பட்ட கலையரங்க மேடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் எஸ். நடராஜன் கலையரங்க மேடையைத் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க நிா்வாகிகள் கண்ணன், குமாா், சேது காா்த்திகேயன், பள்ளித் தலைமை ஆசிரியை சா. சுசரிதா, உதவி ஆசிரியா் மு. பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.