ஆலங்குடியில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காவல் உதவி ஆய்வாளா் சந்திரகாந்த் தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, பழைய நீதிமன்றம் பகுதியில் மதுவை பதுக்கி வைத்து விற்ற வெண்ணாவல்குடியைச் சோ்ந்த குமாா் (45), பாத்தம்பட்டி சாலையில் மது விற்ற கீழகரும்பிரான்கோட்டை செல்லக்கண்ணு (44) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து
சுமாா் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான 262 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.