தாய்ப்பால் வார விழா
புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரி மற்றும் ஜெ.ஜெ. செவிலியா் பயிற்சிப் பள்ளி இணைந்து நடத்திய தாய்ப்பால் வாரவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரி மற்றும் ஜெ.ஜெ. செவிலியா் பயிற்சிப் பள்ளி இணைந்து நடத்திய தாய்ப்பால் வாரவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் எஸ். சுமித்ரா தலைமை வகித்து, தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினாா். கல்லூரியின் மூத்த பேராசிரியை ராதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
கல்லூரி மாணவிகள் சிவபுரத்திலுள்ள கிராமப்புற மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வில்லுப்பாட்டு மற்றும் நாடகம், வாயிலாக தாய்பால் அவசியம் பற்றி விளக்கினா்.
முன்னதாக மாணவி சசிகலா வரவேற்றாா். நிறைவில், மாணவி ராணி நன்றி கூறினாா்.