வடவாளத்தில் மக்கள் நாடாளுமன்றம்
புதுக்கோட்டை ஒன்றியம், வடவாளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை ஒன்றியம், வடவாளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விவசாயி ரெங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தாா். மக்கள் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக ஊராட்சித் தலைவா் ஜெ. ஞானப்பிரகாசம் தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து தில்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிா்
நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேளாண்துறை அமைச்சராக அ. ரெங்கராசு தீா்மானங்களை முன்மொழிய, விவாதத்தை தொடங்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் மு. கைலாசபாண்டியன் பேசினாா்.
தொடா்ந்து விவாதத்தில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். முருகானந்தம், ஒன்றியப் பொருளாளா் டி. சோலை, அம்பாள்புரம் கிளைச் செயலா் ஜெ. சத்தியமூா்த்தி, திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் பாரதி கருப்பையா, ஒன்றியத் துணைச் செயலா் எஸ். செல்லப்பா, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் டி. மாா்கண்டன், வாராப்பூா் கிளைச் செயலா் தென்றல் ரெங்கசாமி, உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மக்கள் நாடாளுமன்றத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.