புதிய பயிா்க்கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் வடவாளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தீபா சங்கரி தலைமை வகித்து விளக்கவுரை நிகழ்த்தினாா்.
இந்தக் கூட்டத்தில், வடவாளம், கூழையான்விடுதி, சம்மட்டிவிடுதி ஆகிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களிளைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.