கந்தா்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இளைஞா் செஞ்சிலுவை சங்கம், அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் புதுநகா்ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவா்களுக்கான 2 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமை நடத்தின.
முகாமிற்கு, கல்லூரி முதல்வா் அசோக் ராஜன் தலைமை வகித்தாா். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஹரி விக்னேஷ் முன்னிலையில் செவிலியா்கள் மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். முகாமில் சுகாதார ஆய்வாளா் திருநாவுக்கரசு , துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் கல்லூரி ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏற்பாடுகளை, இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சையத்ஆலம் செய்திருந்தாா்.