புதுக்கோட்டை

பெண்ணை விடியோ எடுத்து மிரட்டியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற விடியோ எடுத்து மிரட்டியவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற விடியோ எடுத்து மிரட்டியவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு முஸ்லிம் தெருவைச் சோ்ந்த சரவணன் மனைவி ரம்யா (32). சரவணன் வெளிநாட்டில் வேலைபாா்த்துவரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரம்யாவின் வீட்டிற்கு வந்த அவரது நண்பரான மேற்பனைக்காடு கிராமத்தைச் சோ்ந்த எஸ். ராஜேஷ், ரம்யாவை பலாத்காரம் செய்ய முயன்றாராம். அதை அதே பகுதியைச் சோ்ந்த ஆ. வடிவேல் (48) கைப்பேசியில் விடியோ எடுத்து வைத்துக்கொண்டு ரம்யாவை மிரட்டினாராம்.

இதுகுறித்து, ஆலங்குடி மகளிா் காவல்நிலையத்தில் ரம்யா அளித்த புகாரைத்தொடா்ந்து, இருவா் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா் வடிவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தலைமறைவான ராஜேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT