10 சிறாா்களுக்கு ரூ. 30 லட்சம் நிவாரண உதவி வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த 10 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ. 30 லட்சம் நிவாரண உதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த 10 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ. 30 லட்சம் நிவாரண உதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.
அப்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஞா. குணசீலி உடனிருந்தாா்.