புதுக்கோட்டை

ரூ. 9.98 லட்சத்துக்கு பறிமுதல்: வாகனங்கள் ஏலம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு காவல் துறையினரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 9.98 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினரால் கடந்த ஆண்டுகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செவ்வாய்க்கிழமை ஆயுதப்படை திடலில் ஏலம் விடப்பட்டன.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெரினா பேகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், நான்கு சக்கர வாகனம் - 3, மூன்று சக்கர வாகனம்- 1, இரு சக்கர வாகனங்கள்- 20 என மொத்தம் 24 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி வரி சோ்த்து ரூ. 9.98 லட்சம் பெறப்பட்டதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT