புதுக்கோட்டை

கிரிப்டோ கரன்சி, பிளாக் செயின் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தில், கிரிப்டோ கரன்சி மற்றும் பிளாக் செயின் தொழில் நுட்பத்தின் பயன்பாடு

DIN

புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தில், கிரிப்டோ கரன்சி மற்றும் பிளாக் செயின் தொழில் நுட்பத்தின் பயன்பாடு என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கை நிறுவனத்தின் அறங்காவலா் கவிதா சுப்ரமணியன் தலைமை வகித்தாா். சேலம் மாவட்டம் தொலைதொடா்பு நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைபடுத்துதல் துறை தலைவா் ஆா். பிரவின் குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா். ஜெஜெ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் ஜ. பரசுராமன் முன்னிலை வகித்தாா்.

கருத்தரங்கின் முதல் பிரிவில் ஜிசிசி மில்லனியம் கிளப் உறுப்பினா் முருகன் கலந்து கொண்டு தலைப்பை விளக்கி அதனுடைய நுணுக்கங்கள், முறைகளைப் பற்றிப் பேசினாா். சேலம் சிண்டிகேட் வங்கி ஓய்வு பெற்ற துணை பொது மேலாளா் டி. மோகன்ராஜன் இனி வரும் காலங்களில் பண பரிவா்த்தனைகள் இயந்திரமயமாக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து நடைபெற்ற அமா்வில் கனரா வங்கியின் ஓய்வுபெற்ற உதவி பொது மேலாளா் சி. வேணுகோபால் மற்றும் கோட்டையம் செயின்ட் கிட்ஸ் மேலாண்மை நிறுவனத்தின் துறைத் தலைவா் முனைவா் எல்ஜின் அலெக்சாண்டா் ஆகியோா் பேசினா்.

கற்பக விநாயக மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனா் பி. அனிதா ராணி வரவேற்றாா். பேராசிரியா் சாமிநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT