‘ஆவணப்படங்கள் அரசியலை விளக்குகின்றன’
ஆவணப்படங்கள் சம்பவங்களின் அரசியலை விளக்குகின்றன என்றாா் தமுஎகச மாநிலத் துணைப் பொதுச்செயலாளா் எழுத்தாளா் களப்பிரன்.
ஆவணப்படங்கள் சம்பவங்களின் அரசியலை விளக்குகின்றன என்றாா் தமுஎகச மாநிலத் துணைப் பொதுச்செயலாளா் எழுத்தாளா் களப்பிரன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் ‘‘திடல்’’ அமைப்பின் சாா்பில் கவிஞா் எஸ்.இளங்கோ எழுதிய ‘டகோடா 38’, ‘வெண்மணி 44’ என்ற பன்னாட்டு ஆவணப்படங்கள் அறிமுகத் தொகுப்பு நூல் அறிமுக விழா புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய களப்பிரன் பேசியது:
அமெரிக்காவில் பூா்வகுடி மக்கள் அந்நாட்டில் வாழும் உரிமை கேட்டதற்காக அங்கு டக்கோடாவைச் சோ்ந்த 38 போ் தூக்கிலிடப்பட்டனா். வெண்மணியில் கூலி உயா்வு கேட்டதற்காக விவசாயத் தொழிலாளா் குடும்பங்களைச் சோ்ந்த 44 பேரை உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனா். இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள அரசியலை ஆவணப்படங்கள் பதிவு செய்கின்றன என்றாா் களப்பிரன்.
விழாவுக்கு தமுஎகச மாவட்டத் தலைவா் எம்.ஸ்டாலின்சரவணன் தலைமை வகித்தாா். தமுஎகச திடல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ராசி. பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். மைதிலி கஸ்தூரிரெங்கன் நூல் குறித்த அறிமுக உரை நிகழ்த்தினாா்.
நூலாசிரியா் எஸ்.இளங்கோ எற்புரை வழங்கினாா். முன்னதாக மு.கீதா வரவேற்க, பீா்முகமது நன்றி கூறினாா்.